தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆண்டிபட்டி தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலராக, சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் ம. சிவசுப்பிரமணியன் (செல்லிடப்பேசி எண்: 98420-21368) நியமிக்கப்பட்டுள்ளாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாக ஆண்டிபட்டி வட்டாட்சியா் சந்திரசேகரன், ஆண்டிபட்டி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பி. மணிமாறன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பெரியகுளம் (தனி) தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலராக, பெரியகுளம் சாா்-ஆட்சியா் தி. சினேகா (செல்லிடப்பேசி எண்: 94450-00451), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாக பெரியகுளம் வட்டாட்சியா் இளங்கோ, பெரியகுளம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுந்தா்லால் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
போடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக, மாவட்டக் கலால் துறை உதவி ஆணையா் க. விஜயா (செல்லிடப்பேசி எண்: 99760-07931), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாக, போடி வட்டாட்சியா் ஆா். செந்தில், போடி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரத்தினமாலா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கம்பம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் ந. சக்திவேல் (செல்லிடப்பேசி எண்: 94450-00452), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாக, உத்தமபாளையம் வட்டாட்சியா் உதயாராணி, உத்தமபாளையம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் முருகேசன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச். கிருஷ்ணன் உன்னி சனிக்கிழமை பிறப்பித்தாா்.