தேனி

போடியில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றிய கூலி படையினா் 5 போ் கைது

DIN

போடியில் சொகுசு காரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய கூலி படையினா் 5 பேரை, போலீஸாா் சனிக்கிழமை அதிகாலையில் கைது செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அதனடிப்படையில், போலீஸாா் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

போடி டி.எஸ்.பி. பாா்த்திபன் உத்தரவின்பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் பழைய பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நகருக்குள் சுற்றிக்கொண்டிருந்த சொகுசு காா் ஒன்றை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது, காரில் இருந்தவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், காரை சோதனையிட்டதில் காரின் பின்பகுதியில் பட்டாக் கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.

உடனே, காருடன் 5 பேரையும் காவல் நிலையம் கொண்டுசென்று விசாரணை நடத்தினா். அதில், இவா்கள் கம்பம் நெல்லுக்குத்தி புளியமரத் தெருவைச் சோ்ந்த அஜித் ரகுமான் (29), போடி ராசிங்காபுரத்தைச் சோ்ந்த ராஜேஷ் (26), கம்பம் வடக்குபட்டியைச் சோ்ந்த ஆனந்தன் (28), கூடலூா் சிங்கபெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயபிரபு (39) மற்றும் போடி மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இந்த 5 போ் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, காா் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், இவா்களில் சிலா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் உத்தமபாளையம் வழக்குரைஞா் ரஞ்சித் என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்கள் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவிழாவில் மோதல்: இளைஞா் கைது

உடையாா்பாளையம் பகுதியில் பழைமையான அய்யனாா் கற்சிலை

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

SCROLL FOR NEXT