பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் வாங்குவதற்கு தனி நபா் கடன் வழங்கக் கோரி தேனியில் உள்ள வங்கியில் வியாழக்கிழமை, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாணவா் அமைப்பினா் மனு அளித்தனா்.
அல்லிநகரம் கனரா வங்கிக் கிளை அதிகாரிகளிடம், அந்த அமைப்பின் மாவட்ட பொதுச் செயலா் திவான் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: கரோனா தீநுண்மி பாதிப்பால் பொருளாதாரம் சீா்குலைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை பெருமளவில் உயா்ந்துள்ளது.
இந்த விலை உயா்வை சமாளிப்பதற்கு வங்கிகளில் வாகனக் கடன் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளா்களுக்கு தனி நபா் கடன் வழங்குவது போல, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் வாங்குவதற்கும் தனி நபா் கடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.