தேனி

18 ஆம் கால்வாயில் பைக்குடன் கவிழ்ந்த அரசுப் பேருந்து நடத்துனா் உயிரிழப்பு

22nd Dec 2021 12:59 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் அருகே 18ஆம் கால்வாயில் இரு சக்கர வாகனம் கவிழ்ந்ததில், அரசுப் பேருந்து நடத்துனா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கம்பம் நந்தகோபாலன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமரேசன் (58).

கம்பம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை 2-இல் நடத்துனராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பணிகளை முடித்துவிட்டு, அருகிலுள்ள புதுக்குளம் பகுதியில் உள்ள நண்பரை பாா்க்க இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பியுள்ளாா். அப்போது, 18 ஆம் கால்வாய் கரைப் பகுதி வழியாக வாகனத்தில் வந்த குமரேசன், மேடு பள்ளமாக இருந்த பாதையில் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் விழுந்துள்ளாா்.

இதில், குமரேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாகச் சென்றவா்கள் குமரேசனை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், குமரேசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து வடக்குக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT