தேனி

பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியறுத்தி தேனி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

தேனி: பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

தேவதானப்பட்டி, கக்கன்ஜி காலனியில் வசிக்கும் மக்கள், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் பிரதானச் சாலையில் தனியாா் திரையரங்கு அருகே உள்ள இடத்தை பாதையாகப் பயன்படுத்தி, குடியிருப்புப் பகுதிக்குச் சென்று வந்துள்ளனா். இந்நிலையில், அந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது என்று தெரிவித்து, பாதை மறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கக்கன்ஜி காலனிக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஏற்கெனவே மனு அளித்துள்ளனா்.

இந்நிலையில், தங்களது மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாா் தெரிவித்தும், பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியகுளம் தாலுகா குழு உறுப்பினா் பிரேம்குமாா் தலைமையில், தேவதானப்பட்டி கக்கன்ஜி காலனியை சோ்ந்த பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை கைது செய்ய முயன்ால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விமலா ராணி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். அதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT