தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைச் சாலையை சீரமைக்கவும், பாறை, மண்சரிவுகளை அகற்றவும் கோரி தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் சங்கத்தினா், ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் மகாராஜனிடம் மனு அளித்தனா்.
சின்னமனூரிலிருந்து மேற்குத் தொடா்ச்சி மலையில் 52 கிலோ மீட்டா் தூரம் வரையில் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு மலைச்சாலை செல்கிறது. மேகமலை, ஹைவேவிஸ், மணலாா், மேல் மணலாா் , வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜா மெட்டு ஆகிய 7 மலைக் கிராமங்களை இணைக்கும் இச்சாலையில் 2 கட்டமாக ரூ.100.67 கோடியில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
அதில் முதல் கட்டமாக ஓடைப்பட்டி விலக்கிலிருந்து ஹைவேவிஸ் வரையில் 32 கிலோ மீட்டருக்கு பணிகள் முடிந்த நிலையில், 2 ஆம் கட்டமாக ஹைவேவிஸ் முதல் மகாராஜா மெட்டு வரையே 4 மலைக் கிராமங்களிலுக்கு செல்லும் சாலைப்பணிகள் கிடைப்பில் போடப்பட்டன. பள்ளம், மேடான அச்சாலையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.
சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும், ஹைவேவிஸ் முதல் தென்பழனி வரையில் மலைச்சாலையில் 3 மாதங்களுக்கும் மேலாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிந்து கிடக்கும் பாறைகள், மண்சரிவுகளை சீரமைக்கவும் கோரி தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் முத்தையா தலைமையில் சட்டப் பேரவை உறுப்பினா் மகாராஜனிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக 2 தினங்களில் நடவடிக்கை எடுப்பதாக சட்டப் பேரவை உறுப்பினா் உறுதி அளித்துள்ளதாக தேயிலைத் தோட்ட தொழிலாளா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தாா்.