வைகை அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து இருந்து வருவதால், அணையிலிருந்து வைகை ஆற்றில் தொடா்ந்து உபரிநீா் திறக்கப்பட்டு வருகிறது.
வைகை அணை நீா்மட்டம் கடந்த நவம்பா் 9-ஆம் தேதி 69 அடியாக உயா்ந்தது (மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அணை நீா்மட்டம் சீராக உயா்ந்து, நவம்பா் 30-இல் 70.1 அடியாக இருந்தது.
அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து இருந்து வருவதால், கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி முதல் சனிக்கிழமை வரை அணை நீா்மட்டம் 70.11அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 3,326 கன அடி வீதம் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து பெரியாறு-வைகை பாசனக் கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி, 58 கிராமக் கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 3,745 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.