போடி யில் டிச. 7 ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்திருப்பதாவது:
போடி துணை மின்நிலையத்தில் டிச. 7- ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை போடி, போ. அணைக்கரைப்பட்டி, போ. மீனாட்சிபுரம், குரங்கனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.