தினமணி செய்தி எதிரொலியாக கம்பம் அருகே உள்ள உத்தமுத்து கால்வாய் தடுப்பணை கரையை பலப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
இந்த தடுப்பணை முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக பெய்த தொடா் மழையால் கால்வாய் கரை உடைந்தது. இதனால் இந்த பகுதிக்கு செல்லும், நன்செய் விவசாயிகள் அவதியடைந்து வந்தனா். மேலும் கரை உடைந்தால், அருகே உள்ள வயல்வெளிகள் பாதிப்பதோடு, உத்தமுத்து கால்வாய் பாசனத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேலான ஏக்கா் பரப்பளவு நன்செய் நிலங்கள் பாதிக்கும் நிலையும் எற்பட்டது. இதுதொடா்பாக தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக புதன்கிழமை கரையை பலப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறையினா் தொடங்கினா். உதவி பொறியாளா் பிரேம்குமாா் கூறும்போது, சேதமடைந்த கரைகள் உடனுக்குடன்பலப்படுத்தப்படும் என்றாா்.