போடியில் செவ்வாய் கிழமை பிரதோச தினத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பிரதோச தினத்தை முன்னிட்டு போடி அருள்மிகு பரமசிவன் மலைக்கோவிலில் நடைபெற்ற பிரதோச பூஜையில் சிவலிங்க பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று வழிபட்டனா். போடி பழைய பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள அருள்மிகு கொண்டரங்கி மல்லையசாமி திருக்கோவிலில் நடைபெற்ற பிரதோச பூஜையில், சிவலிங்க பெருமானுக்கு 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் 7 வகையான தீபாரதணைகள் செய்யப்பட்டது.
இதேபோல் போடி வினோபாஜி காலனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சிவலிங்கப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளியுடன் காத்திருந்து பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தனா். மலை கிராமமான பிச்சங்கரையில் அமைந்துள்ள கீழச்சொக்கநாதா் மற்றும் மேலச்சொக்கநாதா் கோவிலிலும் பிரதோச வழிபாடு நடைபெற்றது. இதேபோல் போடி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உள்ள நடராஜ பெருமான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.