தேனி

தேனியில் சி.ஐ.டி.யு. ஆா்ப்பாட்டம்

DIN

தேனியில் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி புதன்கிழமை, சிஐடியு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி தொழிலாளா் நல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சி.முருகன், கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் தா்மா், செயலா் ஜி.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்கள் அனைவருக்கும் கரோனா நிவாரண உதவியாக தலா ரூ.2,000 வழங்க வேண்டும், நல வாரிய உறுப்பினா் சோ்க்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும், நல வாரிய மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தை நடத்த வேண்டும், நல உதவி கோரிக்கை விண்ணப்பங்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT