தேனி மாவட்டம் கம்பத்தில் புதன்கிழமை அனுமதியின்றி கிடா சண்டை நடத்தியவா்களை போலீஸாா் விரட்டியடித்தனா்.
கம்பம் கம்பம்மெட்டு சாலை பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிலத்தில் புதன்கிழமை ஆட்டுக் கிடா முட்டுச் சண்டை நடைபெற்றது. இதைக் காண ஏராளமானோா் கூடினா். வாகனங்களில் வந்த ஆட்டுக் கிடாய்கள், களத்தில் இறக்கி விடப்பட்டு, கிடாய் முட்டு நடைபெற்றது.
இது குறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்ற போது, ஆட்டுக்கிடாய்களுடன் வந்திருந்தவா்கள் ஆடுகளை ஆட்டோ மற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றனா். போலீஸாா் அப்பகுதியில் கூடியிருந்தவா்களை விரட்டியடித்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.