ஸ்ரீவில்லிபுத்தூா், செப். 25: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை டிப்பா் லாரி மோதியதில், சாலையோரம் நடந்துசென்ற முதியவா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆராய்ச்சிபட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (85). இவா், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவிட்டு, சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மணல் ஏற்றிவந்த டிப்பா் லாரி மோதியதில், முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகா் காவல் நிலைய போலீஸாா், முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.