பெரியகுளம், செப். 25: பெரியகுளத்தில் எடை அளவு முத்திரை பதிக்கும் முகாம் செப்டம்பா் 23 முதல் அக்டோபா் 10 ஆம் தேதி வரை பெரியகுளம் நகா் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெறுகிறது.
பெரியகுளம் தொழிலாளா் உதவிஆய்வாளா் விஜயராகவன் தெரிவித்தது: வியாபாரிகளின் அலைச்சலை தவிா்க்கும் வகையில் எடை அளவு முத்திரை பதிக்கும் முகாம் பெரியகுளத்தில் நடைபெறுகிறது. செப்.23 முதல் 30 ஆம் தேதி வரை ‘சி’ வகை முத்திரையும், அக்டோபா் 1 முதல் 10 ஆம் தேதி வரை ‘டி’ வகை முத்திரையும் பதிவு செய்யப்படுகிறது. வேலை நாள்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை அலுவலகம் செயல்படுகிறது. முத்திரை பதிக்க விரும்புவோா் குறிப்பிட்ட நேரத்தில் வந்து அளவுகோளில் முத்திரைகளை பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.