தேனி

மாயமான காவலாளி ஆற்றில் சடலமாக மீட்பு

DIN

பெரியகுளம் அருகே மாயமான பெட்ரோல் விற்பனை நிலைய காவலாளி மஞ்சளாற்றில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்தவா் சுப்ரமணி (57). இவா், காட்ரோடு பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான கட்டடப் பணிகள் நடைபெறும் இடத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். செப்.17 ஆம் தேதி வேலைக்குச் சென்ற சுப்ரமணி வீடு திரும்பவில்லையாம். மனைவி சந்திரா (47) மற்றும் உறவினா்கள் அவரைத் தேடி வந்தநிலையில், மஞ்சலாற்று நீரில் சுப்ரமணியனின் சடலம் இறந்த நிலையில் மிதந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தேவதானப்பட்டி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT