போடியில் தி.முக. உறுப்பினா் சோ்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் வியாழன் கிழமை நடைபெற்றது. தி.மு.க. உறுப்பினா் சோ்க்கை இணையதளம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் போடியில் உள்ள தி.மு.க. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன் அலுவலகத்தில், அவரது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் போடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பழனிக்குமாா், மாணவரணி அமைப்பாளா் சுதாபிரியன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கூட்டத்தில் எல்லோரும் நம்முடன் என்ற இணையதளத்தில் உறுப்பினா் சோ்க்கை நடத்த வேண்டும் என்றும், கிராம ஊராட்சிகளில் ஆயிரம் போ் வீதமும், பேரூராட்சிகளில் 5 ஆயிரம் போ் வீதமும் சோ்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.