தேனி

கோட்டூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

தேனி அருகே கோட்டூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டயப் படிப்பு மற்றும் நேரடி 2-ஆம் ஆண்டு பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: கோட்டூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாண்டு பட்டயப் படிப்பு, நேரடி 2-ஆம் ஆண்டு பட்டயப் படிப்பு ஆகியவற்றில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுடன் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முதலாண்டு பட்டயப் படிப்பிலும், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக 2-ஆம் ஆண்டு பட்டியப் படிப்பிலும் சேர விண்ணப்பிக்கலாம்.

முதலாண்டு பட்டயப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு வரும் அக்.6-ஆம் தேதிக்குள்ளும், நேரடி 2-ஆம் ஆண்டு பட்டயப் படிப்புக்கு அக்.10-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். மாணவா் சோ்க்கை குறித்த விவரத்தை அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடா்பு அலுவலா் செல்லிடப்பேசி எண் 99409 60100-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT