பெரியகுளத்தில் சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பெண் வீட்டில் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பெரியகுளம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் விஜயலெட்சுமி (53). இவா் தனது கணவா் இறந்தபின் தனது மகன் தினேஷ்குமாா் (25) உடன் பெரியகுளம், ஜெஆா்ஆா் நகரில் வசித்து வந்தாா். இவருக்கு சா்க்கரை நோய் இருந்து வந்ததால் அதற்கு சிகிச்சை பெற்று வந்தாா். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த அவா் தனது வீட்டின் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.