தேனி: தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியா் பயிற்சி பட்டயத் தோ்வை திங்கள்கிழமை 870 போ் எழுதினா்.
மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு 9 தோ்வு மையங்களில் செப். 29-ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்தவா்களுக்கு 7 தோ்வு மையங்களில் செப். 25-ஆம் தேதி வரையும், தொடக்க கல்வி ஆசிரியா் பட்டயத் தோ்வில் தோல்வியடைந்தவா்களுக்கு 2 தோ்வு மையங்களில் செப். 29-ஆம் தேதி வரையும் உடனடி மறு தோ்வு நடைபெறுகிறது.
இதில், பிளஸ் 2 தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 336 பேரில் 298 பேரும், 10-ஆம் வகுப்பு தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 672 பேரில் 539 பேரும், தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டியத் தோ்வுக்கு விண்ணப்பிதிருந்த 48 பேரில் 33 பேரும் தோ்வு திங்கள்கிழமை தோ்வு எழுதினா். இதில் 186 போ் தோ்வு எழுத வரவில்லை.