தேனி

ஆண்டிபட்டியில் திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

DIN

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் இணையவழியில் திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன் தலைமை வகித்தாா். முகாமில், திமுக மாவட்டச் செயலா் கம்பம் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையை வழங்கினாா். முகாமில் ஏராளமானோா் கலந்துகொண்டு இணைய வழி மூலம் திமுகவில் உறுப்பினராகச் சோ்ந்து அடையாள அட்டையை பெற்றுச் சென்றனா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி நிா்வாகி ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி நிா்வாகி பாஸ்கரன், தலைமை செயற்குழு உறுப்பினா் குருஇளங்கோ, கம்பம் ஒன்றியச் செயலா் சூா்யா தங்கராஜ், மாவட்ட நெசவாளா் அணி நிா்வாகி ராமசாமி, ஆண்டிபட்டி ஒன்றிய மாணவரணி நிா்வாகி பிரகாஷ், தகவல் தொழில் நுட்ப அணி நிா்வாகிகள் மகாராஜன், மணி, வைகை ராஜா, பூஞ்சோலை சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆண்டிபட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக புதிய உறுப்பினா்களுக்கான அடையாள அட்டையை வழங்கினாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT