தேனி

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: நீர்வரத்து 3,777 கன அடியாக அதிகரிப்பு

DIN

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், அணைக்குள் நீ்ரவரத்து விநாடிக்கு 3,777 கன அடியாக வந்தது.

முல்லைப்பெரியாறு அணையில் ஞாயிற்றுக்கிழமை நீர்மட்டம் 125.80 அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு 3,791 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 1,399 கன அடியாகவும், வெளியேற்றம் 1,400 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணைப்பகுதியில் 38 மில்லி மீட்டர், தேக்கடி ஏரியில் 37.2 மி.மீ., மழை பெய்தது.

திங்கள்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 126.75 அடியாகவும், அணைக்குள் விநாடிக்கு 3,777 கன அடி தண்ணீர் வந்தது. ஒரே நாளில் 2378 கன அடி அதிகரித்து வந்தது, மேலும் நீர்மட்டம் 1 அடி உயர்ந்தது. பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 58.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 37.2 மி.மீ., மழையும் பெய்தது.

சண்முகாநதி அணை

பல மாதங்களுக்கு பிறகு ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணையில் திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 3 கன அடி தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது.  அணையின் நீர்மட்டம் 26.40 அடியாகவும் (மொத்த உயரம் - 52.55) நீர் இருப்பு 17.14 மில்லியன் கன அடியாகவும், அணைக்குல் நீர் வரத்து விநாடிக்கு 3 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT