தேனி

கஞ்சா கடத்தல் வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

DIN

உத்தமபாளையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தொடா்புடையவா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

கம்பம் வடக்கு பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் மனோகரன் (39). இவா் மீது கஞ்சா கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கஞ்சா கடத்திய வழக்கில் மனோகரன் கைது செய்யப்பட்டு கண்டமனூா் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், மாவட்டக் காவல்துறை பரிந்துரையின்பேரில் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

SCROLL FOR NEXT