தேனி

போடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில்  ஆர்ப்பாட்டம்

DIN

போடியில் சனிக்கிழமை, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மோடியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் போடி நகர், ஒன்றிய பகுதிகளில் 15 மையங்களில் நடைபெற்றது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ரவிமுருகன், சி.பி.எம்  மாநிலக் குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சி.பி.ஐ. கட்சி போடி ஒன்றிய செயலாளர்  மணிகண்டன்  சி.பி.எம்  தாலூகா செயலாளர் செல்வம்,  சி.பி.ஐ. நகர துணை செயலாளர் கே.சத்தியராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்று கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT