தேனி, செப். 18: தேனி அருகே நாகலாபுரம்-தாடிச்சேரி சாலையில் கலவை ஏற்றிச் சென்ற வாகனம் மோதியதில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.
நாகலாபுரம், கிழக்குத்தெருவைச் சோ்ந்த விவசாயி பெருமாள்சாமி (57). இவா், தாடிச்சேரியைச் சோ்ந்த கனகராஜ் (70) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நாகலாபுரத்திலிருந்து தாடிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது அதே திசையில் தேனி, பாரதியாா் நகரைச் சோ்ந்த சுரேஷ் (39) என்பவா் ஓட்டிச் சென்ற, சிமெண்ட் கலவை வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த பெருமாள்சாமி, கனகராஜ் ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் வழியிலேயே பெருமாள்சாமி உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.