தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் பெற சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து பயன்பெறும் வகையில் அவா்களுக்கு சிறு, குறு விவசாயிகள் என சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். அதன்பேரில் ஆண்டிபட்டி வருவாய்த் துறையினருடன் இணைந்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையினா் இந்த முகாமை ஏற்பாடு செய்திருந்தனா். இம்முகாமை வேளாண்மைத் துறை துணை இயக்குநா் வளா்மதி தொடக்கி வைத்தாா். உதவி இயக்குநா் ராஜசேகா், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் துரைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் ஆண்டிபட்டி வருவாய் கிராமப் பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை சமா்ப்பித்து சிறு குறு விவசாயிகளுக்கான சான்றிதழைப் பெற்றுச் சென்றனா்.