தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் திங்கள்கிழமை திடீா் மழை பெய்தது. கம்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.
தொடா் மழை பெய்து கொண்டிருந்தபோது கம்பம் நகரில் பல முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனா். அதே நேரத்தில் கடந்த 2 நாள்களாக கடுமையான வெயில் அடித்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இதே போல் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் மழை பெய்தது.