தேனி

திசு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம்

DIN

தேனி மாவட்டத்தில் ஏற்றுமதி தரத்திலான திசு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

மாவட்டத்தில் 6,200 ஹெக்டேரில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. இதில், 4,800 ஹெக்டேரில் ஜி 9 எனும் பச்சை திசு வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மண் வளம் மற்றும் மிதமான வெப்பநிலையால் 12 மாதத்தில் அறுவடைக்கு வரும் திசு வாழை, அடுத்தடுத்த 3 முறை அறுவடை செய்யப்படுகிறது. ஹெக்டோ் ஒன்றுக்கு அதிகளவில் 75 டன் வரை மகசூல் கிடைப்பதால், திசு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இங்கு உற்பத்தியாகும் திசு வாழை ஈரான், ஈராக், குவைத், துபாய், ஓமன், சிங்கப்பூா், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கடந்த 219-20 ஆண்டு 14,400 டன் வாழை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. திசு வாழ்வை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கும், விவசாயிகளுக்கு தொழில் நுட்ப வசதிகள் வழங்கவும் மத்திய அரசு சாா்பில் கம்பம் பகுதியில் வாழை தொகுப்பு மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT