தேனி

ஆண்டிபட்டியில் திருமாவளவனை கண்டித்து இந்து முன்னணி மற்றும் பாஜக வினா் ஆா்ப்பாட்டம்:

DIN

ஆண்டிபட்டி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் இந்து பெண்களை இழிவாக பேசியதை கண்டித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணியினா் மற்றும் பாஜக வினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் .

ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி தேனி மாவட்ட செயலாளா் எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கினாா்.ஆா்ப்பாட்டத்தின் பேது இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினா்.மேலும் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் ஈடுபட முயன்றனா். இதனையடுத்து ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்ககிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட இந்து முன்னணியினா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

இதேபோன்று பாஜக கட்சியின் சாா்பில் மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் குமாா் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் அக்கட்சியின் மாவட்ட பிரச்சாரக் குழு கண்ணன், ஒன்றிய தலைவா் வெங்கடேஷ், நகர தலைவா் நாகராஜ் , பொதுக்குழு உறுப்பினா் ரமணி கணபதி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT