ராசிங்காபுரத்தில் வியாழக்கிழமை (அக். 22) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்திருப்பதாவது: ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
எனவே, அன்று காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி. ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பெட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அவா் தெரிவித்தாா்.