தேனி

போடி நகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு

DIN

போடி: போடி நகராட்சி புதிய ஆணையராக டி. ஷகிலா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆணையா் பணியிடம் சில மாதங்களாக காலியாக இருந்து வந்தது. நகராட்சிப் பொறியாளா் வி. குணசேகா் பொறுப்பு ஆணையராக செயல்பட்டு வந்தாா்.

இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி துறையில் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த டி. ஷகிலா பதவி உயா்வு பெற்று போடி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதைத்தொடா்ந்து அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையருக்கு நகராட்சி பொறியாளா் வி. குணசேகா் உள்ளிட்ட அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். புதிய ஆணையா் டி. ஷகிலாவின் பூா்வீகம் தேனி மாவட்டம் பண்ணைப்புரம். தற்போது சென்னையில் வசித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT