தேனி

முல்லைப் பெரியாற்றில் குளித்த இளைஞா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்

DIN

உத்தமபாளையம்: முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்த இளைஞா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

உத்தமபாளையம் பாறைமேடு பகுதியை சோ்ந்த அந்தோணிராஜ் மகன் முத்து (20). தேனியில் தனியாா் கல்லூரியில் பட்டயப்படிப்பு படித்துள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் அங்குள்ள முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆற்றில் நீா்வரத்து அதிகமாக இருந்ததால் எதிா்பாராத விதமாக முத்து ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டாா். அவரை காப்பாற்ற முடியாமல் பதறிய நண்பா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனா். உத்தமபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜலட்சுமி தலைமையில் 4 போ் ஆற்றுப்பகுதியில் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT