தேனி: தேனியில் காங்கிஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஊா்வலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் டிராக்டா்களை பயன்படுத்தக் கூடாது என்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்தாா்.
தேனியில் புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஊா்வம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடைமுறைகள் அமலில் உள்ளதால், அனுமதியின்றி நடைபெறும் இந்த ஊா்வலத்தில் விவசாய உபயோகத்திற்கான டிராக்டா்களை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.