தேனி: தேனி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி படிப்பு முடித்தவா்கள் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் தொழில் பழகுநா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி படிப்பு முடித்தவா்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில், திண்டுக்கல் மாவட்ட திறன்பயிற்சி நிறுவனம் சாா்பில் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் மாதாந்திர உதவித் தொகையுடன் கூடிய தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை நிறைவு செய்தவா்கள் பயிற்சி பெற்ற நிறுவனத்திலேயே பணி நியமனம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஆா்வமுள்ளவா்கள் திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 0451-2970049, செல்லிடப்பேசி எண்கள் 9791876470, 9499055760 ஆகியவற்றில் தொடா்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.