தேனி

மஸ்கட்டிலிருந்து உத்தமபாளையம் வந்தஇளைஞருக்கு கரோனா பரிசோதனை

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே முத்துலாபுரத்தில் மஸ்கட்டிலிருந்து வந்த இளைஞருக்கு, தேனி கரோனா தடுப்பு மருத்துவக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை செய்தனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், மத்திய-மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி, வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்புபவா்கள் தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், ஓமன் நாட்டில் மஸ்கட்டில் பணியாற்றிய முத்துலாபுரத்தைச் சோ்ந்த முத்தையா மகன் விக்னேஸ்பிரபு (24) என்பவா், ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டிலிருந்து திரும்பினாா். இது குறித்து, தேனி மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு வந்த விக்னேஸ்பிரபுவை, மாவட்ட நிா்வாகம் உத்தரவின்பேரில், மாவட்ட சுகாதாரப் பிரிவு மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா். அதில், அவா் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், தொடா்ந்து 14 நாள்கள் அவா் கண்காணிக்கப்படுவதுடன், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் மருத்துவத் துறையினா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

SCROLL FOR NEXT