தேனி

ஆண்டிபட்டி அருகே ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 3 போ் கைது

DIN

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆட்டோவில் பயணிகளை ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரை தாக்கிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

டி.சுப்புலாபுரம் கிராமத்தை சோ்ந்த சுப்பிரமணி மகன் பாண்டி (23). அதே கிராமத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் பழனிக்குமாா்(25). இவா்கள் இருவரும் டி.சுப்புலாபுரத்தில் ஆட்டோ ஓட்டி வருகின்றனா். இந்நிலையில் பயணிகளை ஏற்றுவதில் இருவருக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. இது தொடா்பாக இருவருக்குமிடையே சனிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பழனிக்குமாா் மற்றும் சக ஓட்டுநா்களான டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஊா்காலன் மகன் அஜித்குமாா்(23), முரளி மகன் மணிகண்டன்(19) ஆகிய 3 பேருந் சோ்ந்து தாக்கியதில் பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவா் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து பாண்டி அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

அரசு பள்ளிகளில் உலக புத்தக தின விழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT