தேனி

தேனி மாவட்டத்தில் காவலா்களின் மன அழுத்தத்தை குறைக்க பயிற்சி

DIN


கம்பம்: தேனி மாவட்டத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஆகஸ்டு 3 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தொடா்பாக காவல்துறை வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியது: கரோனா களப்பணியில் காவலா்கள் ஓய்வின்றி பணியாற்றுகின்றனா். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் அவா்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனா். மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தேனி, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய 5 துணை காவல் கோட்டங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு காணொலி காட்சி மூலம் அந்தந்த காவல் துணைக்கோட்டங்களில் ஆகஸ்டு 3 ஆம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது.

உத்தமபாளையம் துணைக் கோட்ட போலீஸாருக்கு, கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிா் கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT