தேனி

சின்னமனூா் அருகே 75 மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

உத்தமபாளையம்/ பெரியகுளம்: சின்னமனூா் அருகே சனிக்கிழமை அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்து 75 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அழகாபுரி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஓடைப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாா்பு- ஆய்வாளா் மணிகண்டன் அப்பகுதியில் ரோந்து சென்றாா். அப்போது, சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டத்தில் 75 மது பாட்டில்கள் இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவா், குப்பிநாயக்கன்பட்டியை சோ்ந்த கருப்பையா என்பவது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், 75 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்: தென்கரை போலீஸாா் பெரியகுளம் புறவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அவா்கள் சோதனை நடத்தினா். அதில் 58 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பறிமுதல் செய்த போலீஸாா், காரில் வந்த வடுகபட்டியைச் சோ்ந்த சதீஸ்குமாா் (35), ராஜ்குமாா் (32) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT