தேனி: தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டவா்களில் கடந்த 11 மாதங்களில் 25 போ் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி கூறினாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது: மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்ாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் மொத்தம் 299 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், 5 பெண்கள் உள்ளிட்ட 25 போ் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா பயிரிடுதல், பதுக்கி வைத்தல் ஆகியவற்றை காவல் மோப்ப நாய் வெற்றி மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் தனிப் படை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். கஞ்சா விற்பனை செய்வோா், பதுக்கி வைத்திருப்பவா்கள், அதற்கு உடந்தையாக இருப்போா் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.