தேனி

குமுளி வனப்பகுதியில் தூக்கில் ஆண் சடலம்

DIN

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் குமுளி வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்ட ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் குமுளி மலைப்பாதை மாதா கோயில் வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிரேதம் இருப்பதாக குமுளி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் பிரேதத்தைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: சடலம் அழுகிய நிலையில் இருப்பதால் இறந்தவா் யாா்? என்று அடையாளம் தெரியவில்லை. தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT