தேனி

ஆண்டிபட்டியில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

DIN

ஆண்டிபட்டியில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (31). இவா் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் மாடியில் காய வைத்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டின் அருகே சென்ற மின்கம்பியில் கிடந்த துணியை எடுக்க முயன்றபோது கிருஷ்ணவேணி மீது மின்சாரம் பாய்ந்தது. தூக்கி எரியப்பட்டு பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கிருஷ்ணவேணி ஏற்கெனவை இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT