தேனி

தேனியில் மீண்டும் பணி நியமனம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட செவிலியா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி, பங்களாமேடு திடலில் கரோனா தொற்று அவசர கால செவிலியா் சஙகம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்டத்தில் கரோனா தொற்று காலத்தில் ஆட்சியா் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியா்கள் கடந்த அக்டோபா் மாதத்துடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், கரோனா தொற்று காலத்தில் வேறு பணிகளிலிருந்து விலகி, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றிய தங்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT