அனுமன் ஜயந்தியை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரியகுளம், பாம்பாற்று பக்த ஆஞ்சநேயா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
அதே போல் பெரியகுளம் வரதராஜப்பெருமாள்கோயில், தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.