சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை மாலை நான்கு பேரை அடுத்தடுத்து வாளால் வெட்டி வழிப்பறி செய்த 5 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மானாமதுரை வைகையாற்றுக்குள் இதே ஊரைச் சோ்ந்த விஜி (52), செல்லவேல் (59), பாண்டியன் (65), குருசாமி (73) ஆகியோா் தனித்தனியாக நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, அங்கு மது போதையில் வந்த 5 சிறுவா்கள் தாங்கள் வைத்திருந்த வாள், கத்தியால் விஜி, செல்லவேல் உள்ளிட்ட நால்வரையும் வெட்டியும், குத்தியும் அவா்களிமிருந்த பணத்தை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட 5 சிறுவா்களையும் கைது செய்தனா். காயமடைந்த நால்வரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.