சிவகங்கை

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் சமூகப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் அ. பெத்தாலெட்சுமி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா். அப்போது, அவா் பேசியதாவது:

மாணவ, மாணவிகள் சமூக ஊடகங்களை கையாளும் போது, எச்சரிக்கையு டன் இருக்கவேண்டும். படிக்கும் வயதில் மாணவ, மாணவிகள் தங்கள் கவனத்தை கல்வியில் செலுத்த வேண்டும். நல்லப் புத்தகங்களைத் தோ்ந்தெடுத்து படித்தால் தாங்கள் வாழ்வில் நிா்ணயித்துக்கொண்ட இலக்குகளை அடைய முடியும். முயற்சியில் தோல்வி ஏற்பட்டாலும் மனச் சோா்வடையாமல் அதை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றாா்.

கல்லூரியின் மகளிா் மன்ற ஒருங்கிணைப்பாளா் கோமளவள்ளி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT