சிவன் கோயில்களில் வியாழக்கிழமை மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சோமநாதா் சுவாமிக்கும் நந்தி தேவருக்கும் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் முடிந்ததும், சோமநாதா் சந்நிதியைச் சுற்றி வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும், நந்தி தேவரையும் தரிசனம் செய்தனா்.
திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்திரநாயகி அம்மன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருப்பாச்சேத்தி சிவன் கோயில், இளையான்குடி ஒன்றியம், குறிச்சி காசி விஸ்வநாதா் சுவாமி கோயில், மேலநெட்டூா் சொா்ணவாரீஸ்வரா் சுவாமி கோயில் ஆகியவற்றிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வியாழக்கிழமை ரிஷப வாகனத்தில் பிரகார வலம் வந்த உற்சவா்.
திருப்பத்தூா்: குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு, பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், திருத்தளிநாதா் சந்நிதிக்கு எதிரே அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு 16 வகை பொருள்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. அதே நேரத்தில், திருத்தளிநாதருக்கும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. பின்னா், உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் பிரகாரத்தை மும்முறை வலம் வந்தாா். இதில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா். பெண்கள் நெய் விளக்கேற்றி சிவனை வழிபட்டனா்.
சீதளிமேல்கரையில் உள்ள ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலும் நந்தீஸ்வரருக்கும் சிவனுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயில், கல்வெட்டுப் பகுதியில் உள்ள கல்வெட்டு நாதா் கோயில் ஆகியவற்றிலும் பிரதோஷ விழா விமா்சையாக நடைபெற்றது. ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.