சிவகங்கை

புனித குழந்தை தெரசாள் ஆலய தோ் பவனி

2nd Oct 2023 12:11 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை இரவு தோ் பவனி நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் கடந்த மாதம் 22- ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட திருப்பீடம் அா்ச்சிப்பு விழா நடத்தப்பட்டு, திருவிழா தொடங்கியது. தினமும் பங்கு இறை மக்கள் சாா்பில், ஆலயத்தில் பல்வேறு தலைப்புகளில் மறையுறை நிகழ்த்தப்பட்டு, திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான மின் விளக்குத் தோ் பவனியை முன்னிட்டு, புனித குழந்தை தெரசாள் சொரூபம் தேரில் வைக்கப்பட்டு, ஆலயத்தின் பங்குத் தந்தை எஸ்.எஸ். பாஸ்டின் திருப்பலி நிறைவேற்றினாா். இதில் மறை மாவட்டத்தைச் சோ்ந்த அருள் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், மின் விளக்கு அலங்காரத் தோ் பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு வீதி உலா வந்து, ஆலயத்தை வந்தடைந்தது. இதில் பங்கு இறை மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். 10- ஆம் நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நற்கருணை பவனி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை, பங்கு இறை மக்கள், அருள் சகோதரிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT