சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே திங்கள்கிழமை மின்னல் பாய்ந்து ஆடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காந்திஜி நகரைச் சோ்ந்தவா் ராமா் மகன் நாகராஜ் (40). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், இளையான்குடி பகுதியில் விஜயன்குடி சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், மின்னல் தாக்கியதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள மேலப்பெருங்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு மகன் மாரி (47). விவசாயியான இவா் ஆடுகள் வளா்த்து வருகிறாா். திங்கள்கிழமை மாலையில் அந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், அவா் வயல்காட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை வீட்டுக்கு அழைத்து வந்து மரத்தில் கட்டினாா். அப்போது, மின்னல் தாக்கியதில் 6 ஆடுகளும் உடல் கருகி உயிரிழந்தன. இதுகுறித்து, பரமக்குடி வட்டாட்சியா் ரவி விசாரணை நடத்தி வருகிறாா்.