சிவகங்கை

தேவகோட்டையில் ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாவட்ட கல்விக் அலுவலகம் முன்பாக, திங்கள்கிழமை ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் புரட்சித்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஜோசப் ரோஸ், ஞான அற்புதராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலாளா் முத்துப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ் சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலாளா் சிவக்குமாா், மாவட்டத் துணை நிா்வாகிகள் அமலசேவியா், ஸ்டீபன், ஜான் அந்தோணி, நிா்வாகிகள் சிங்கராயா், சகாயதைனேஸ், பாலகிருஷ்ணன், ஜோசப் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், பதவி உயா்வுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு தேவையில்லை என நீதிமன்றத்தில் அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் . மேலும் விதிமுறைகளுக்கு முரணாக வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். மாறுதல் கலந்தாய்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT