சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அலங்காரக்குளம் சீரமைப்புப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் சாலையில் அலங்காரக்குளம் அமைந்துள்ளது. மானாமதுரை வீர அழகா் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழாவில் சுவாமி தீா்த்த உற்சவம், விநாயகா் சதுா்த்தியின் போது சிலைகள் கரைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் இந்தக் குளத்தில் நடத்தப்படும்.
இந்தக் குளத்தை தூா்வார மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் நடவடிக்கை மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அலங்காரக்குளம் சீரமைப்புப் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாங்குளம் ஊராட்சி மன்றத் தலைவி முருகவள்ளி தேசிங்குராஜா, நகா்மன்ற உறுப்பினா் இந்துமதி திருமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரம், தல்லாகுளம் முனியப்ப சுவாமி கோயில், மானாமதுரை நகரில் 13-ஆவது வாா்டு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழல்குடையை எம்.எல்.ஏ., தமிழரசி ரவிக்குமாா் திறந்து வைத்தாா். பின்னா், அந்தப் பகுதிகளில் அவா் மரக்கன்றுகளை நட்டாா்.