சிவகங்கை

கோயில் திருவிழாவில் கிடாய்முட்டுச் சண்டை

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள திட்டுக்கோட்டை உறுதிகோட்டை கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கிடாமுட்டுச் சண்டை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழாவை முன்னிட்டு முதலாமாண்டு கிடாமுட்டுச் சண்டை போட்டி நடத்த, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது.

அதன்பேரில், சுமாா் 30 இணை கிடாய்கள் இப்போட்டியில் பங்கேற்றன. திடல் நடுவில் இரு கிடாய்கள் ஒன்றோடு ஒன்று 60 முறை முட்ட வேண்டும். இதில் எந்த கிடாய் முட்டாமல் திடலை விட்டு வெளியேறிச் செல்கிறதோ, அது தோற்ாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளருக்கு பதக்கமும், பரிசும் வழங்கபட்டன.

இந்தப் போட்டியில், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30 ஜோடி கிடாய்கள் பங்கேற்றன. இதை பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஆா்வமுடன் பாா்த்து ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

மாடர்ன் ரதி.....பிரியங்கா அருள் மோகன்

SCROLL FOR NEXT